விளையாட்டு

IPL வரலாற்றில் மோசமான சாதனை: டெல்லி அணிக்கு பெரும் சோகம்!

  • April 28, 2026
  • 0 Comments

IPL வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மோசமான சாதனையை Delhi Capitals அணி நேற்று பதிவு செய்துள்ளது. IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 39 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru மற்றும் Delhi Capitals ஆகிய அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற RCB அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி பவர்பிளே ஓவர்களில் முற்றிலும் நிலைகுலைந்தது. பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்!

  • April 28, 2026
  • 0 Comments

நெடுநாள் இழுபறிக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவரை ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான David Brat என்பவரே இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ராஜதந்திர சேவையிலும் தேர்ச்சி பெற்றவர். 2024-ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய தூதுவர் பதவியில் இருந்து கரோலின் கென்னடி விலகிய பிறகு, நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த இடத்திற்கு தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரே இவர் பதவி விலகி […]

செய்தி விளையாட்டு

டெல்லி, பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • April 27, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (27) நடைபெறும் 39 ஆவது லீக் ஆட்டத்தில் Delhi Capitals மற்றும் Royal Challengers Bengaluru ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். RCB அணி IPL 2026 தொடரில் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அத்துடன், 5 போட்டிகளில் விளையாடியுள்ள Royal Challengers Bengaluru அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் அவ்வணி 7 ஆவது இடத்தில் உள்ளது.

உலகம் செய்தி

சிரிய முகாமிலுள்ள ஆஸ்திரேலிய பெண்களுக்கு அடைக்கலம் கிடைப்பதில் சிக்கல்!

  • April 27, 2026
  • 0 Comments

சிரியாவின் அல்-ரோஜ் முகாமில் தங்கியிருந்த நான்கு ஆஸ்திரேலியப் பெண்களும் ஒன்பது குழந்தைகளும் தற்போது அங்கிருந்து வெளியேறித் தாயகம் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற முயற்சி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை சிரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்குப் பயணக் கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ள போதிலும், அவர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான நேரடி உதவிகளைச் செய்ய மறுத்துவிட்டது. இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பு தொடர்பான […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடாவிடின் ‘தாயகம்’ பறிபோகும்!

  • April 27, 2026
  • 0 Comments

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்துவரும் ஒற்றுமை முயற்சிக்கு மத்தியில், தமிழ்த் தேசியப் பேரவை பிறிதொரு மாற்றுக் குழுவை முன்மொழிந்துள்ளமையானது தமிழ்க் கட்சிகளின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்” இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அண்மைக் காலமாகப் பல சந்திப்புகளைக் கொழும்பில் […]

செய்தி விளையாட்டு

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

  • April 27, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. இறுதி பந்துவரை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர்வரை சென்றது. லக்னோ ஏகானா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு […]

இந்தியா செய்தி

பலமடைந்துள்ள இந்திய ராணுவ வலிமை!

  • April 23, 2026
  • 0 Comments

“ இந்தியாவின் ராணுவ வலிமை முன்னெப்போதையும் விட பன் மடங்கு வலுப்பெற்றுள்ளது.” – என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார். ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது ராணுவம் என்ன சாதித்துள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நமது ராணுவ வலிமை வலுப்பெற்றுள்ளது. இந்தியா உலகிலுள்ள […]

இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலை என்ன?

  • April 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 19 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 211 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஏப்ரல் 1 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்து 634 பேரும், பிரிட்டனில் இருந்து 7 ஆயிரத்து 672 பேரும், ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 351 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் ‘Yellow Line’ கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியது இஸ்ரேல்!

  • April 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) என்ற புதிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது. காசா பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிரிவினையைப் போலவே, இந்த எல்லைக்கோடு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும், இந்த எல்லையைத் தாண்டி வரும் நபர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது. அண்மையில் இந்த எல்லையை மீறியதாகக் கூறப்படும் ஆயுததாரிகள் […]

அரசியல் இலங்கை செய்தி

ஒற்றுமைக்கான முயற்சியை தகர்த்தது தமிழ்க் காங்கிரஸ்: தமிழரசுக் கட்சி விசனம்!

  • April 18, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- […]