பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பாகிஸ்தான் அவதானம்!
இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நஸீர் (Nayyar Naseer), இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது, இலங்கையில் அவரது தூதரகப் பதவிக்காலத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை, குறிப்பாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்துக் […]













