செய்தி விளையாட்டு

ODI: இலங்கை, மே.தீவுகள் இன்று பலப்பரீட்சை!

  • June 3, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் ODI கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது. ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 2027 உலகக் கோப்பைத் தகுதியை இலக்காகக் கொண்டு நடைபெறும் இப்போட்டிகள், தரவரிசையில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் மிக முக்கியமானவை. குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் தலைவராக மீண்டும் பாறுப்பேற்றுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நட்சத்திர வீரர் ஷாய் ஹோப்பின் சிறப்பான ஆட்டத்தை […]

செய்தி விளையாட்டு

பாகிஸ்தான் வீழ்த்தியது ஆஸ்திரேலியா: நாளை தீர்க்கமான போட்டி!

  • June 3, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. லாகூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன், […]

செய்தி விளையாட்டு

FIFA உலகக்கோப்பை: காலநிலை சவாலை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தீவிர பயிற்சி!

  • June 3, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின்போது நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியாளர் தாமஸ் துஷெல் அறிவுறுத்தலின்படி, வீரர்கள் முன்கூட்டியே புளோரிடாவிற்குச் சென்று அங்குள்ள சுற்றுச்சூழலுக்குப் பழகி வருகின்றனர். ஜோர்டான் ஹென்டர்சன் போன்ற மூத்த வீரர்கள், போட்டிகளின் போது சிறப்பாகச் செயல்பட இந்த வெப்பநிலை தழுவல் மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். அணியின் மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் வீரர்களின் உடல்நிலையைச் […]

உலகம் செய்தி

அலி கமேனிக்கு 3 மாதங்களின் பின் இறுதிச் சடங்கு! தெஹ்ரானில் திரளும் 2 கோடி மக்கள்!!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் பொது இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளது. ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் […]

இலங்கை செய்தி

ஆஸ்திரேலிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கை Penny Wong சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக-பொருளாதார கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரால் நேற்று விருந்தோம்பலும் […]

இலங்கை செய்தி

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்!

  • June 3, 2026
  • 0 Comments

வவுனியா, குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இக்கோரச் சம்பவத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று செவ்வாய்க்கிழமை குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்ததில், அதில் சிக்குண்டு அந்த இளைஞர் சம்பவ […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 8 என்புத் தொகுதிகள் அடையாளம்!

  • June 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றைய அகழ்வின் போது குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், சிறுவர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்படப் புதிதாக 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் […]

உலகம் செய்தி

பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் சாதனை படைத்த இஸ்ரேல்!

  • June 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $19.2 பில்லியன் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதைய போர்க்களங்களில் இந்தத் தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதால், சர்வதேச அளவில் இவற்றுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பா மற்றும் […]

இலங்கை செய்தி

அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் கொழும்பு வந்தன!

  • June 2, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படைக்கு, அமெரிக்கா கடற்படையால் வழங்கப்பட்ட TH-57 ‘Sea Ranger பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர்கள் தற்போது, இரத்மலானவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தொழில்நுட்பக் கட்டமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர், இவை சேவையில் சேர்க்கப்பட்டு செயற்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த உதவியானது இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க […]

இலங்கை செய்தி

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: இணையவழி சாட்சியமளிக்க கோட்டாவுக்கு அனுமதி!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், நிகழ்நிலை ஊடாகத் தோன்றிச் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10ஆம் திகதி, யாழ்ப்பாண நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர், […]