புதிய கட்சி அடுத்த தேர்தலில் களமிறங்கும்: அண்ணாமலை அறிவிப்பு!
“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகரியான அண்ணாமலை, பாஜக ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார். பாஜக தமிழக தலைவராகவும் பதவி வகித்தார். அண்மையில் பாஜக தமிழக தலைவராக புதியவர் நியமிக்கப்பட்டார். இதனால் சட்டசபைத் தேர்தலில்கூட அண்ணாமலை போட்டியிடவில்லை. பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று […]













