இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

  • March 30, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் […]

இலங்கை

யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது

  • March 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், அந்த வீட்டில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், வீட்டு வேலைகளுக்காக 54 வயதுடைய பெண் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக அந்தத் தம்பதியினர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.  […]

இலங்கை செய்தி

இலங்கை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை

  • March 27, 2026
  • 0 Comments

இலங்கை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 27, 2026
  • 0 Comments

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றும் வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் […]

இலங்கை உலகம்

மின்னல் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை!

  • March 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலை 128.52 டொலர்கள் அதிகரித்து 4,528.19 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2.49 சதவீத அதிகரிப்பாகும். இதேவேளை, இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று […]

இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

  • March 24, 2026
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்து, பொதுச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க […]

இலங்கை

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • March 24, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான வானிலை காரணமாக, சிறுவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். அதிகப்படியான தூக்கக்கலக்கம் அல்லது சோம்பல், பசியின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடம் தென்பட்டால் அவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் சிறுவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (Natural fluids) வழங்குவது அவசியமாகும் […]

இலங்கை

உச்சத்தில் பேருந்து கட்டணம்!

  • March 24, 2026
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து, நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துக் கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இரண்டாயிரத்து 159 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் 263 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக இரண்டாயிரத்து 422 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் வழக்கம் போல் பேருந்துச் சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என […]

இலங்கை

மஹரகம பகுதியில் உள்ள கடைகளில் தீப்பரவல்

  • March 8, 2026
  • 0 Comments

மஹரகம பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின், 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்புப் படையினர் தற்போது தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!