குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை : தளங்களுக்கு பிரான்ஸ் பிறப்பித்துள்ள உத்தரவு
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதித்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக பிரான்ஸ் திகழ்கிறது. இதன்படி, ஜனவரி 2027 முதல் வயது சரிபார்ப்பை அமல்படுத்துமாறு சமூக ஊடக தளங்களிடம் கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்காக ஆஸ்திரேலியா விதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தடையைத் தொடர்ந்து இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதுடன், தற்போது ஏராளமான நாடுகள் இந்த சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்து வருகின்றன. இந்தத் தடைகள், அடிமையாக்கும் […]







