இலங்கை செய்தி

ஐ.ம.ச வும் ஐ.தே.க வும் ஒன்றிணைந்தன – உறுதிப்படுத்திய சஜித்

  • May 1, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியும்ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற மே தினப் பேரணியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமைக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளவாறு இரு கட்சிகளும் இணைந்து பயணிப்பதற்காக குழு ஒன்றை […]

அரசியல் இலங்கை

இலங்கைக்காக ஆஸ்திரேலியாவிடம் உதவி கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் 

  • December 8, 2025
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு […]

அரசியல் இலங்கை

இனவாதத்துக்கு சமாதி கட்டுமாறு சஜித் வலியுறுத்து

  • November 26, 2025
  • 0 Comments

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம மற்றும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர். “ அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள், மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி எம்முன்னால் […]

அரசியல் இலங்கை

ரணில், சஜித் அணிகள் இணைவு: காட்டப்பட்டது பச்சைக்கொடி !! 

  • November 24, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக ழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவது தொடர்பான பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இதற்கமைய இரு தரப்பு இணைவு விரைவில் சாத்தியமாகும் என்று ஐக்கிய […]

அரசியல் இலங்கை

சஜித்தின் செயற்பாடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதிருப்தி

  • November 8, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது இந்திய விஜயத்தின்போது ஓரிரு எதிரணி எம்.பிக்களையேனும் தம்முடன் அழைத்து செல்லாமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் கட்சி தலைமைமீது அவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு உத்தியோகப்பூர்வ – முக்கியத்துவமிக்க வெளிநாட்டு பயணங்களின்போது எதிரணி சார்பில் வெளிவிவகாரம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது அழைத்து சென்றிருக்கலாம் என்பதே அவர்களின் வாதமாக […]

அரசியல் இலங்கை

ஹர்ஷவை களமிறக்கும் சஜித்: நாளை நடக்கப்போவது என்ன?

  • November 7, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை (08) ஆரம்பமாகின்றது. எதிரணி தரப்பில் இருந்தே விவாதம் ஆரம்பித்து வைக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர். இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். […]