ஜெர்மனியில் ரயிலுடன் மோதிய பாடசாலை பேருந்து – 04 பேர் உயிரிழப்பு!
ஜெர்மனியில் பாடசாலை பேருந்து ஒன்று ரயில் ஒன்றுடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தை தொடர்ந்து பெல்ஜிய அவசர சேவைகள் களமிறக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மோதலின் சூழ்நிலைகள் குறித்து அரசு வழக்கறிஞர்களும் தடயவியல் குழுக்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.



