சவூதி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து – 14 பேர் பலி
சவூதி எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, ராஸ் தனுராவில் (Ras Tanura) விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்படடுள்ளது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியை, அராம்கோ நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



