மாகாண சபைத் தேர்தல் – நிதி ஒதுக்கீடு தொடர்பில் எழுந்துள்ள குழப்பம்!!
மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள், வேறு எந்த நோக்கங்களுக்காகவும் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எழுதிய கடிதத்தில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள், அரசாங்கத்தால் பேரிடர் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சில்வா கூறியுள்ளார். எனக்குத் தெரிந்தவரை, மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தச் செலவினத் தலைப்பிற்கோ அல்லது […]









