மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், நீண்டகாலமாகத் தாமதப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை “விரைவில்” நடத்துமாறும், அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளை முழுமையாகச் செயல்படுத்துமாறும் இந்தியா இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலர், நேற்று (05) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது தித்வா புயலுக்குப் பிறகு இலங்கையின் மீட்புக்கான ஆதரவு, எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல், திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், காங்கேசன்துறை […]










