அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் ஹார்முஸ் நீரிணையில் துருக்கி களமிறங்கும்!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் துருக்கி இணையக்கூடும்.
துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேற்படி தூய்மைப்படுத்தும் பணிகளைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுக்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், அதில் பங்கேற்பதில் துருக்கிக்கு எவ்விதத் தடையும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த விவகாரத்தில் ஈடுபடும் நாடுகள் ஏதேனும் புதிய மோதல்களில் சிக்கினால், தனது நிலைப்பாட்டை துருக்கி மறுபரிசீலனை செய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான சிக்கல்கள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் சுமுகமாகத் தீர்க்கப்படலாம் என்றும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





