சமாதான பாதயாத்திரையில் பச்சிளம் குழந்தையை ஆசீர்வதித்த தேரர்: நெகிழ்ச்சிச் சம்பவம்
இலங்கையில் தற்போது, உலக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச ‘அமைதிக்கான பாதயாத்திரை’ நிகழ்ச்சியின் இன்றைய பயணத்தின் போது, காண்போரை நெகிழ வைக்கும் மனிதாபிமானச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வணக்கத்திற்குரிய பன்ஞ்ஞாக்கார தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், இன்று (23) வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை அலுவிஹாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை நோக்கித் தமது பாதயாத்திரை ஊர்வலத்தை ஆரம்பித்தனர். வெயிலையும் பொருட்படுத்தாது பக்திப் பெருக்குடன் மக்கள் வீதியோரங்களில் திரண்டிருக்க, பௌத்த பாராயண பாடல்களை இசைத்தபடி இந்த ஆன்மீகப் […]




