உலகம்

ஐரோப்பா நோக்கிய ஆபத்தான பயணங்கள் அதிகரிப்பு -144 அகதிகள் மாயமானதாக அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் தீவுகளுக்குச் செல்லும் பாதையில், மௌரித்தானியாவின் (Mauritania)  கடற்கரைக்கு அப்பால் தொடர்ச்சியாக கப்பல்கள் அல்லது படகுகள் விபத்துக்குள்ளாகுவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 144 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை (UNHCR), ஜூலை 14 முதல் 18 வரையான காலப்பகுதியில் இந்த விபத்துகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த காலப்பகுதியில் மூன்று மீட்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் ஊடாக 387 பேர் […]

இலங்கை

2.5 மில்லியன் டொலர் மாயம் : 200 டொலர்களை மட்டும் மீட்க நடவடிக்கை!

  • May 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இருந்து குற்றவாளிகளின் கைகளுக்கு கிடைக்கப்பெற்ற 2.5 மில்லியன் டொலரில் இருந்து வெறும் 200 டொலர்களே மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் மோசடியால் மாயமாகிய பணத்தை மீட்க இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளனர். இதற்கமைய அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி,  திருடப்பட்ட நிதியின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கும், மீதமுள்ள நிதி மற்றொரு மாகாணத்தில் உள்ள வங்கி கணக்கிற்கும் மாற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், டெலவெயர் மாகாண வங்கி கணக்கு […]

உலகம்

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட படகு விபத்து – 14 பேர் மாயம்!!

  • May 13, 2026
  • 0 Comments

இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் மாயமாகியுள்ளதாக மலேசிய கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேராக்  (Perak ) மாநிலத்தில் உள்ள பாங்கோர் (Pangkor) தீவுக்கு அருகே நேற்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஏழு பெண்கள் உட்பட 23 இந்தோனேசியர்கள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இணைந்து மீட்டதாக  மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மே 9 அன்று இந்தோனேசியாவின் கிசரானில் (Kisaran) இருந்து புறப்பட்டது […]

இலங்கை முக்கிய செய்திகள்

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயம்!

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் திறைசேரியால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் நம்பகமான தரப்பாக நடித்து, தவறான தகவல்களை அளித்து குறித்த பணத்தை  கொள்ளையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் பணத்தை மீட்க வேண்டியிருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மக்கள் மத்தியில்  […]

இலங்கை

இலங்கை – வீட்டை விட்டு வெளியேறிய இரு சிறுவர்கள் மாயம்!

  • October 9, 2025
  • 0 Comments

கண்டி, தென்னகும்புர பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றை தினம் (08.10) அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குறித்த சிறுவர்களின் தாயார் இந்திரமணி காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். தென்னகும்புரவில் மகாவலி ஆற்றின் பக்கம் இரண்டு சிறுவர்களும் செல்வதைக் கண்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.