கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்
கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு கைதிகள் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



