காணி விடுவிப்பு குறித்து யாழ்.கட்டளைத் தளபதியுடன் ஆளுநர் ஆராய்வு!
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை (23.03.2026) மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது என ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய […]













