குரில் தீவு சர்ச்சை – ஜப்பான் தூதரை வரவழைத்த மொஸ்கோ
ஜப்பானும் உரிமை கோரும் குரில் தீவுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பயணித்ததை தொடர்ந்து ஜப்பான் கண்டனம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஜப்பானிய தூதரை மொஸ்கோ வரவழைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் வடக்குப் பிரதேசங்கள் என்று அழைக்கப்படும் இந்த தீவு 1945-ல் சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் சிக்கல் நிலையை அடைந்தன. புட்டின் அருகிலுள்ள ரஷ்ய தீவான சகாலினுக்குச் சென்ற பிறகு இந்தத் தீவுகளுக்குப் பயணம் செய்தார். […]




