கென்யாவில் போராட்டக்கார்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீச்சு
கென்யாவில் இறக்குமதி வரியை நீக்கக் கோரி சிறுவணிக வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், மத்திய நைரோபியில் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் இன்றைய தினம் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிகளின் குறைவான அறிவிப்பு மற்றும் குறைவான மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 20 முதல் வரியை உயர்த்த கென்ய வருவாய் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது. இது விதிமுறைகளுக்கு இணங்கும் வணிகங்களுக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் பாதகமாக அமைவதாகவும் […]






