“ஈரான் கப்பலை இலங்கை பொறுப்பேற்றது தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பு”
ஈரான் கப்பலை இலங்கை பொறுப்பேற்றமையானது தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும் – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் பங்கேற்புடன் நேற்றிரவு நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியவை வருமாறு, ” தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம். எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது […]













