ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டு சிறை! யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு
ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழைப் பகுதியில் 1 கிராம் 440 மில்லிகிராம் (1.44 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற […]













