உலகம் செய்தி

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா முழு ஆதரவு!

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்கு சீனா தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு சீன வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் வாங் யி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல்களைக் குறைத்து, பிராந்திய அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை சீன வெளிவிவகார அமைச்சர் பாராட்டினார்.

இந்த இராஜதந்திர முயற்சியில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவும், தேவையான உதவிகளை வழங்கவும் சீனா தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியை மீட்டெடுக்கும் இந்த முக்கிய பணியில் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்று சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!