இலங்கை

பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூல் – வவுனியாவில் மருத்துவமனை ஒன்றுக்கு 500000 அபராதம்

  • July 29, 2026
  • 0 Comments

முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்ததமைக்காக வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் (CAA), தனது புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இதனை கண்டுப்பிடித்துள்ளது. அந்த மருத்துவமனை, இரத்தப் பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை அவர்கள் கண்டறிந்தனர். விசாரணையைத் தொடர்ந்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அந்தத் தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை […]

இலங்கை

திருமலையில் சோகம் – 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  • July 20, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் உள்ள  பாடசாலையொன்றில் ஆமணக்கு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று   இடம்பெற்றுள்ளது. தரம் 06இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த விதைகளை சூரியகாந்தி விதைகள் என நினைத்து தனது வகுப்பு நண்பர்களுக்கு  கொடுத்துள்ளார். அவற்றை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 20 ஆண் மாணவர்களும், 2 பெண் மாணவர்களும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 […]

இலங்கை

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை

  • July 17, 2026
  • 0 Comments

கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் (16) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்ததும் […]

உலகம்

வியட்நாமில் பாண் உட்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு – பலர் வைத்தியசாலையில்!

  • May 2, 2026
  • 0 Comments

வியட்நாமின் குவாங் ட்ரி (Quang Tri ) மாகாணத்தில் உணவு விஷமாகியமை காரணமாக குறைந்தது 64 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளுர் பேக்கரி ஒன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காலை முதல்  அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, சோர்வு மற்றும் நீரிழப்பு போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் வரத்தொடங்கியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு நரம்பு வழி திரவங்கள், வாய்வழி நீரேற்றம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் […]

உலகம்

சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு!!

  • April 26, 2026
  • 0 Comments

சிகாகோவில்  மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிகாகோவில் உள்ள எண்டெவர் ஹெல்த் ஸ்வீடிஷ் ( Endeavor Health Swedish) மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் ஒருவரைக் கண்காணிப்பிற்காக அழைத்துச் சென்றபோது, ​​சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிகாகோ மேயர் பிராண்டன் […]

இலங்கை

வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

  • February 22, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவரது சமூக வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை […]