இலங்கை

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

  • June 30, 2026
  • 0 Comments

ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவருக்கு அனுராதப்புர நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் 3.074 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தமைக்காக குற்றாவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். சுமார் 04 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபர்  சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதை  அடுத்து, மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

தெற்கு கடற்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு: ஐவர் கைது!

  • December 24, 2025
  • 0 Comments

இலங்கையின் தெற்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் இருந்து பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி 200 கோடி ரூபாவரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த படகு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை, போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. படகில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக கப்பல் இன்று காலை திக்ஹோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. 11 பொதிகளில் […]