ஜெர்மன் நாடாளுமன்றத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்?
ஜெர்மன் நாடாளுமன்றம் (புண்டெஸ்டாக்) மற்றும் பிற அரசியலமைப்பு நிறுவனங்களைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் (lexander Dobrindt) எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நடாளுமன்ற தலைவர் ஜூலியா க்ளோக்னருக்கு (Julia Klöckner) அவசர கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் முக்கிய அரசு நிறுவனங்களைப் பாதுகாக்க ஒரு நிரந்தர ஆளில்லா விமான எதிர்ப்புத் திறனை ஏற்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். “தற்போதைய அச்சுறுத்தலான சூழலைக் […]




