ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி- பயணிகளை ஒரே விமானத்தில் இணைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி

  • May 3, 2026
  • 0 Comments

இந்த கோடை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஒரே இடத்திற்குச் செல்லும் பல விமான சேவைகளில் உள்ள பயணிகளை ஒன்றாக இணைத்து குறைவான விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. ஒரே நாளில் ஒரே இலக்கை நோக்கி செல்லும் பல சேவைகள் உள்ள வழித்தடங்களில்,பயணிகளின்றி செல்லும் விமானங்களை குறைத்து எரிபொருள் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய சில பயணிகள் தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட […]

செய்தி

இலங்கைக்கு கைகொடுக்கும் சீனா!

  • April 5, 2026
  • 0 Comments

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாளை (06) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் வகை மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நாட்டை வந்தடையும் திகதி ஆகியன தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ட்ரம்புடன் பேசினாரா மோடி?

  • October 16, 2025
  • 0 Comments

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய பிரதமர் தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நேற்று (15) தொலைபேசி உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே நேற்று உரையாடல் அல்லது தொலைபேசி அழைப்பு நடந்ததா என்பது […]

ஆப்பிரிக்கா

மாலியில் எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு – பகல், இரவாக வரிசையில் நிற்கும் மக்கள்!

  • October 8, 2025
  • 0 Comments

மாலியில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் பலரும் இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின்  (JNIM) இன் போராளிகள் மாலிக்கு வரும் எரிபொருள் தாங்கிய வண்டிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாரியளவு முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  பமாகோவில் (Bamako) உள்ள வங்கி ஊழியரான அமடோ பெர்த்தே என்ற நபர் […]