தெஹ்ரானில் விமான சேவைகள் இடைநிறுத்தம்!
தெஹ்ரானில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெஹ்ரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் நீண்ட காலமாக மூடப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டிருந்த நிலையில் மீளவும் மூடப்பட்டுள்ளது.




