போலி கனேடிய கடவுச்சீட்டு : லண்டன் செல்ல முயற்சி- இலங்கை தமிழர் பெங்களுரில் கைது
போலி கனேடிய கடவுச்சீட்டு மற்றும் போலி குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டனுக்குப் பயணிக்க முயன்றதாகக் கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எஸ். சுபாகரன் என்ற இலங்கை பிரஜை லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது, அவரது பயண ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்த குடிவரவு அதிகாரிகள் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சுபாகரன் ஜூன் 23 அன்று விமான நிலையத்திற்கு வந்து, சிங்கப்பூர் […]



