புறக்கோட்டையில் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது
புறக்கோட்டையின் நான்கு வெவ்வேறு இடங்களில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 04 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து நான்காயிரம் போதை மாத்திரைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த […]





