உலகம்

பெய்ஜிங்கில் பரபரப்பு – 108 மாடிக் கட்டிடத்தில் மோதிய விமானம்

  • June 26, 2026
  • 0 Comments

சிறிய ரக விமானம் ஒன்று பெய்ஜிங்கின் மிக உயரமான கட்டிடத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 108 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடம் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பகுதியூடான சாலைப் போக்குவரத்து மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அவ்வழியே சென்றவர்களை  சம்பவத்தை  படம்பிடிப்பதைத் தடுத்துள்ளனர். பொலிஸார், தாங்கள் எடுத்த படங்களை நீக்குமாறு தனிநபர்களுக்கு அறிவுறுத்தியுடன், மக்களைக் கட்டிடத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகளிடமிருந்து உடனடியாக அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.