இந்தியா

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கல்லால் அடித்து மனைவி கொலை… கணவன் எடுத்த விபரீத முடிவு!

தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவர், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனூர் தாலுகா தித்திகி கிராமத்தைச் சேர்ந்தவர் பீமன்னா. இவருக்கு கவிதா(26) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாகவே நகர்ந்துள்ளது. திடீரென தன் மனைவியின் நடத்தையின் மீது பீமன்னாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அதே போல, பீமன்னா மீது கவிதாவிற்கும் சந்தேகம் ஏற்பட்டது.

இதன் காரணமாக குடும்பத்தின் நிம்மதி குலைந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே போல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பீமன்னா, தனது மனைவி கவிதாவை கல்லால் அடித்துக் கொலை செய்தார்.

Double Murder Triggers Panic In Kolkata | Nation

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை, அப்பகுதியில் உள்ளவர்கள், பீமன்னா உடல் மரத்தில் தொங்குவதைப் பார்த்து பாலகனூர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதன் காரணமாக விரைந்து வந்த பொலிஸார், மரத்தில் இருந்து பீமன்னா உடலை இறக்கினர். இதன் பின் அவர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது கவிதா கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content