செய்தி தமிழ்நாடு

குடும்ப பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை

ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 2ஆவது தளத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.

இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர். இவர் மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார்.

இவர்களுக்கு லோக்நாத்/17 என்ற மகன் உள்ளார். இவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு, 11ஆம் வகுப்பில் சேர இருந்தார்.இந்த நிலையில் இன்று லோக்நாத் வீட்டு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில் லோக்நாத் 2ஆவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஆவடி போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் லோக்நாத் சாதாரணமாக நடந்து வந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது.

புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாணவர் தற்கொலைகான காரணம் குறித்து பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content