ஐரோப்பா

உக்ரைனில் அவசரகால நிலை அறிவிப்பு!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), எரிசக்தித் துறையில் இன்று அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

நாட்டின் உள்கட்டமைப்பு மீதான தொடர்ச்சியான ரஷ்ய தாக்குதல்களைத் தொடர்ந்து தடைபட்ட மின்சார விநியோகத்தை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

குறிப்பாக கடந்த வாரம் கியேவில், மின்சாரம் மற்றும் வெப்பத்தை மீட்டெடுக்க பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவு நேர வெப்பநிலை -20C க்கு அருகில் குறைந்து வருவதால், மக்கள் குளிரில் சிக்கி தவிக்கின்றனர். அத்துடன் பழுதுபார்க்கும் பணிகளும் கால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியாளர்கள் நெகிழ்வு தன்மையும் பணியாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்