இலங்கை

இலங்கை – வேலை வாய்ப்பு வழங்குவாதக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது!

டுபாய், கட்டார் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (02) தெமட்டகொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடவைச் சேர்ந்த ஷிப்னா என்ற பெண், தமக்கு டுபாய் மற்றும் கட்டாரில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்து, தெமட்டகொடையில் வசிக்கும் மூவரிடம் தலா 4 இலட்சம், 2.5 இலட்சம் மற்றும் ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு 3 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இந்த பெண் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (02) இரவு தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்