இலங்கை செய்தி

இலங்கை: அஹங்கமவில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் மரணம்

Sri Lanka: Three workers die in Ahangama wall collapse

அஹங்கம(Ahangama), பெலஸ்ஸ(Belessa) பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மதில் சுவர் மற்றும் மண் மேடு இடிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்ததாக அஹங்கம காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்று தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தொழிலார்கள் வேலை செய்து கொண்டிருந்த போது மதில் திடீரென இடிந்து விழுந்து மூவரும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கொன்னகஹேன(Konnakahena) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், பின்னர் அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை