தமிழ்நாடு

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; காவல் உதவி ஆய்வாளர் போக்சோவில் கைது!

கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கில் துடியலூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் துடியலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண் இல்லாத சமயத்தில் அவரின் 17 வயது மற்றும் 19 வயது மகள்களை பாலியல் ரீதியாக உதவி ஆய்வாளர் துரைராஜ் துன்புறுத்தி வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமிகள் வீட்டில் இருந்து வெளியேறினர். இரு இளம் பெண்கள் மாயமானது குறித்து அவரது தாயார் மத்திய மகளிர் காவல் துறையினர் புகார் கொடுத்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் வேறு ஒரு நண்பர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இரு பெண்களையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உதவி ஆய்வாளர் துரைராஜ், இளம் பெண்கள் இருவரையும் பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்தும், அவரது தொந்தரவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்த காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content