இலங்கை வரும் ரஷ்ய தூதுக் குழுவினர்!
ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முரஷ்கோ (Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (03) நாட்டிற்கு வரவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து, அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலையும் நடத்த உள்ளனர்.
இந்தத் தூதுக்குழுவினர், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜயத ஹெரத்தை சந்திக்க உள்ளனர்.
மேலும், மே 04 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைப் பார்வையிட உள்ளனர். அத்துடன், இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சரும் தூதுக்குழுவினரும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களின் பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சி, கல்விசார் ஒத்துழைப்பு (பரிமாற்றங்கள், கூட்டுப் பாடநெறிகள் போன்றவை), ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சுற்றுலா சுகாதார சேவைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முக்கியப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, சுகாதார சேவையின் ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர், தங்களது மூன்று நாள் பயணத்தை நிறைவுசெய்து, வரும் 5ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளனர்.




