இலங்கை

இலங்கையில் வேகமாக பரவிவரும் ரேபிஸ் நோய் : பூனை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் பூனைகள் மூலம் ரேபிஸ் தொற்று பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பதிவான பெரும்பாலான ரேபிஸ் தொற்றுகள் தெருநாய்களால் அல்ல, மாறாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பூனைகளால்  ஏற்பட்டதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நோயாக கருதப்படும் ரேபிஸ் நோய்,  நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், வௌவால்கள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் மூலம் பரவக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடித்தல் அதிகரித்துள்ளது என்றும், பூனைகளின் கீறல்கள் கூட கடித்தது போலவே ஆபத்தானவை என்றும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, விலங்குகள் கடித்தால் அல்லது கீறப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும், செல்லப்பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்