ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்கு ஈரான் தனது பதிலை பாகிஸ்தானில் உள்ள மத்தியஸ்தர்கள் மூலம் அனுப்பியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அந்த பதிலின் விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவும் தனது திட்டத்தின் முழு விபரங்களை வெளியிடவில்லை.
இருப்பினும், அந்த திட்டம் 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை அடிப்படையாகக் கொண்டதாகவும், இது ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், பேச்சுவார்த்தை என்பது சரணடைதல் அல்ல, மாறாக தேசிய உரிமைகளை பாதுகாக்கும் முயற்சி என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.




