சிறைச்சாலை வன்முறை – வெளிப்படையான விசாரணைக்கு சஜித் அழைப்பு
நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்குலைவையும் நிறுவனத் திறமையின்மையையு காரணமாக குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர், ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது, சிறைகளுக்குள் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் […]




