ஐரோப்பா

பிரித்தானியாவில் நீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரை நாடும் மக்கள்!

பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸில் மக்கள் மூன்று நாட்களாக குடிநீர் இன்றி அவதிபட்டு வருகின்ற நிலையில், பிரபலமான ஹோட்டல்கள் கழிவறையை சுத்தம் செய்ய கடல் நீரைபயன்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் 32000 மக்கள் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

செயின்ட் லியோனார்ட்ஸ்-ஆன்-சீ, ஹேஸ்டிங்ஸ் மற்றும் வெஸ்ட்ஃபீல்டில் வசிப்பவர்கள் இன்னும் தண்ணீர் இன்றி தவிப்பதாக சதர்ன் வாட்டர் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 6000 வாடிக்கையாளர்களுக்கு தண்ணீரை விநியோகிப்பதற்காக 04 நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செயின்ட் லியோனார்ட்ஸ்-ஆன்-சீயில் உள்ள அஸ்டா மற்றும் டெஸ்கோ, ஹேஸ்டிங்ஸில் உள்ள சீ ரோடு மற்றும் ஹேஸ்டிங்ஸில் உள்ள ஹேஸ்டிங்ஸ் அகாடமி ஆகிய இடங்களில் குடிநீர் விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சினை சீர் செய்யப்பட்டுள்ளதுடன், அது வழமைக்கு திரும்ப இன்னும் சிறுது நேரம் எடுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக தண்ணீர் தேவைப்பட்டாலோ, தண்ணீர் விநியோகம் கிடைக்காமல் இருந்தாலோ  0330 303 0368 என்ற எண்ணை அழைத்து அறியதருமாறு  அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content