இஸ்லாமாபாத்தில் நடக்கப்போவது என்ன? நேரடி சந்திப்பு நடக்குமா?
அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுக்களுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நேரடி பேச்சு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
இரு தரப்பினரும் அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியே பேச்சு நடத்தவுள்ளனர்.
இப்பேச்சு வெற்றிபெற்றால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இரு நாடுகளும் நேரடிப் பேச்சில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பிராந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதே இந்த இராஜதந்திர நகர்வுகளின் முக்கிய நோக்கமாகும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்கள் இஸ்லாமாபாத் வந்துள்ளன என தெரிகின்றது.




