சியோலுடன் பகைமை பாராட்டும் வடகொரியா : மஞ்சல் கடலில் ஏவுகணை சோதனை!
உறவுகளை மேம்படுத்துவதற்கான தென்கொரிய அரசாங்கத்தின் முயற்சிகளை வடகொரியா புறக்கணித்து அந்நாட்டை தனது “பகைமையான” எதிரி என்று குறிப்பிட்டுள்ளது.
மஞ்சள் கடலில் இன்று பாலிஸ்டிக் ஏவுகணை உட்பட பல எறிகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.
சுமார் 1:00 மணியளவில், வடகொரிய நகரமான சோங்ஜூவிலிருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதை கண்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணைகள் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பறந்ததாகவும், அவற்றின் விவரக்குறிப்புகள் மற்றும் பறக்கும் தூரத்தை ஆய்வு செய்து வருவதாகவும், தென்கொரியா மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தனது நெருங்கிய இராணுவக் கூட்டாளியான அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தயாராக இருப்பதாகவும், உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதாகவும் தென்கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.




