உலகம் செய்தி

நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர முடியுமா? நோபல் கமிட்டி விளக்கம்

2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado), தனது பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை’ எனப் பாராட்டிய மச்சாடோ, இந்த வெற்றிக்காக ட்ரம்ப்புடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்துள்ள நோபல் கமிட்டி, ‘ஒருமுறை அறிவிக்கப்பட்ட நோபல் பரிசைத் திரும்பப் பெறவோ அல்லது மற்றொருவருடன் பகிர்ந்து கொள்ளவோ சட்டப்படி இடமில்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நோபல் குழுவின் முடிவுகள் இறுதியானவை மற்றும் நிலையானவை என்றும் அதன் செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சலுகையை ஏற்றுக்கொள்வது தமக்குக் கிடைக்கும் ‘பெரிய மரியாதை’ என ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், நோபல் கமிட்டியின் இந்தத் தெளிவான விளக்கம் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி