ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டது – தொடர்ந்தும் பதற்றம்
அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகையிட்டதற்குப் பதிலாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பல்களை கண்காணிக்கும் MarineTraffic இணையதளத்தின் தகவலின்படி, தற்போது எந்தக் கப்பலும் அந்த நீரிணையை கடக்கவில்லை. பல கப்பல்கள் வளைகுடா பகுதியில், குறிப்பாக ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரை அருகே நங்கூரமிட்டு காத்திருக்கின்றன.
நேற்று வரை இந்த முக்கிய கடல்வழியாக சில கப்பல்கள் சென்றிருந்தாலும், தெஹ்ரான் நீரிணையை மூடுவதாக அறிவித்த பிறகு, போக்குவரத்து வேகம் கடுமையாகக் குறைந்துள்ளது.
மேலும், சனிக்கிழமை பல கப்பல்கள் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாகவும், ஒரு எண்ணெய் கப்பல் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.





