உலகம் செய்தி

தெற்கு லெபனானில் தாக்குதல் – பிரெஞ்சு அமைதிப்படை வீரரின் சடலம் பாரிஸுக்கு

தெற்கு லெபனானில் உயிரிழந்த பிரெஞ்சு அமைதிப்படை வீரரின் உடல் இன்று மாலை பாரிஸுக்கு அனுப்பப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை (யூனிஃபில்) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை, யூனிஃபில் ரோந்து குழுவின் மீது சிறு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில், அந்தப் படையில் பணியாற்றிய ஒரு பிரெஞ்சு வீரர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்புள்ளதாக குற்றம் சுத்தினார்.

இந்தத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த மூன்று அமைதிப்படை வீரர்களில் இருவர் பெய்ரூட்டில் சிகிச்சை பெற்று வருவதாக யூனிஃபில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று ஹிஸ்புல்லா மறுத்துள்ளதுடன், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவசரமாக முன்வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!