அறிவியல் & தொழில்நுட்பம்

Gmail கணக்கில் புதிய வசதி – இனி இலகுவாக கண்டறியலாம்

கூகுள் இமெயில் வழியாக இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை ட்ராக் செய்ய முடியும்.

உலகில் எந்த மூலையில் கிடைக்கும் பொருளாக இருந்தாலும் சரி, அவற்றை வீடு தேடி வர செய்துவிட முடியும். இப்படி ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து இருக்கிறது.

மக்கள் பெரும்பாலானோர் உடைகள், செல்போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் என்ற பல்வேறு வகையான பொருட்களை இணைய வழியாக ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரம் சில முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கூட தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தவறான பொருட்களை டெலிவரி செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கின்றன. இந்த நிலையில் ஆன்லைன் வழியாக பொருட்களை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு சரியான பொருட்கள், சரியான நேரத்தில் வருகிறதா என்பதை உறுதி செய்ய கூகுள் நிறுவனம் தற்போது புதிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்யும் நபர்கள் தங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் மற்றும் எந்த தேதியில் அவை டெலிவரி செய்யப்படும் என்பதை டிராக் செய்து தெரிந்து கொள்ள முடியும்.

இதற்கு கூகுள் இமெயில் செயலியை ஓபன் செய்யாமலேயே டெலிவரி பற்றிய தகவல்களை பெற முடியும். மேலும் டெலிவரி தேதி மாறினால் கூகுள் இமெயிலில் இன்பாக்ஸ் பக்கத்தில் ஆரஞ்சு நிறத்தில் டாப் மெசேஜாக அவை காண்பிக்கப்படும்.

இதற்கு கூகுள் இமெயில் செயலுக்குச் சென்று செட்டிங் பக்கத்தில் நுழைய வேண்டும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Turn on packing tracking என்ற ஆப்ஷனை எனெபிள் செய்தால், அதன் பிறகு ஆர்டர் செய்யும் பொருட்களை ட்ராக் செய்ய முடியும் என்று கூகுள் இமெயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது இந்த முயற்சி அமெரிக்காவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகளுக்கும் இவை விரிவு படுத்தப்பட உள்ளது.

 

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!