ஐரோப்பா

பிரான்ஸில் இளம் தாய்க்கு நேர்ந்த கதி – சிக்கிய காதலன்

பிரான்ஸ் – மார்செய் நகரில் கடந்த காணாமல் போன Mélodie எனும் பெண், 40 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

நவம்பர் 3 ஆம் திகதி அவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 14 ஆம் திகதி, வியாழக்கிழமை இரவு மார்செயின் புறநகர் பகுதியில் இருந்து அவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

34 வயதுடைய அவர், பெண் குழந்தையின் தாய் ஆவார். மார்செயில் கணவருடன் வசித்த அவர், கடந்த நவம்பர் 3 ஆம் திகதி அன்று காணாமல் போயிருந்தார். பின்னர் அவருடைய கணவர் மார்செய் 10 ஆம் வட்டார பொலிஸாரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலையில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Mélodie இன் காதலன் என தெரியவந்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content