செய்தி

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை – கைதான நபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

அமெரிக்காவில் 24 வயது இந்திய மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பில் கொலையாளி கூறிய காரணத்தால் பொலிஸார் திகைத்துப் போயுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் ராஜ் புச்சா என்பவர் கடந்த 2022 ஆகஸ்டில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

வால்பரைஸோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்றுவந்த வருண் கடந்த 29-ஆம் திகதி உடற்பயிற்சி மையத்துக்கு சென்றிருந்தார். அங்கு வந்திருந்த ஜோர்டன் ஆண்ட்ரேட் என்ற சக வயது மாணவர் புச்சுவை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த வருண் ராஜா புச்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஜோர்டன் கைது செய்யப்பட்டார்.

ஜோர்டனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், “நான் சம்பவத்தன்று காலை உடற்பயிற்சிக் கூடத்தின் மசாஜ் அறைக்குச் சென்றேன். அங்கே வருண் இருந்தார். அவரைப் பார்த்தபோது விசித்திரமாக இருந்தார்.

அவரால் எனக்கு ஆபத்து எனத் தோன்றியது. அதனால்நான் அவரை கத்தியால் குத்தினேன்” என்றார். பொலிஸார் அவரை எங்கே குத்தினீர்கள் எனக் கேட்க அவரோ, “நான் கத்தியை இறக்கினேன். அது அவர் தலையில் பாய்ந்தது” என்றார். அவர் சொன்ன விசித்திரமான காரணமும், அவர் கொலையை செய்த முறையும் அதிரவைத்ததென பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்..

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content