ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள நூற்றுக்கும் அதிகமான மக்கள்

பிரான்ஸில் பல்வேறு வகைகளில் அடிப்படை வாத செயற்பாடுகளில் ஈடுபட்ட193 பேரை வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்கட்கிழமை காலை பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் Gérald Darmanin, சந்திப்பின் பின்னர் இது குறித்து தெரிவித்தார்.

மதவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 193 வெளிநாட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமான வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வழக்கினையும் தனித்தனியாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, நாடு முழுவதும் 2,852 பேர் கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும், அவர்களில் 82 பேர் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்