உலகம்

ஜோர்டான் மீது ஏவுகணைத் தாக்குதல் – இரு அமெரிக்க வீரர்கள் பலி

  • July 19, 2026
  • 0 Comments

ஜோர்டான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் அந்த இரண்டு வீரர்களும் கொல்லப்பட்டதை, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தற்போது உறுதி செய்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்களில் நான்கு அமெரிக்கப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

பசுபிக் கடலில் ஏவுகணை சோதனை

  • July 6, 2026
  • 0 Comments

சீன இராணுவம்   பசுபிக் பெருங்கடலில் இன்றைய தினம்  ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது. இது ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் விமர்சனங்களையும் கவலைகளையும் ஈர்த்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையைச் சேர்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் போலிப் போர்க்குண்டைச் ஏற்றி சோதனை செய்யப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஏவுகணை “குறிப்பிட்ட கடல் பகுதியில்” விழுந்ததாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் வழங்கப்படவில்லை. இந்த ஏவுகணைச் சோதனையை, சீனாவின் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் மீது ஏவுகணை மழை – பலர் பலி

  • July 6, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இன்று அதிகாலை பாரிய ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், பல கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ (Tymur ‌Tkachenko) டெலிகிராமில்  இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பொடில்ஸ்கி மாவட்டத்தில் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு நகரம் முழுவதும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.