உக்ரைன் மீது ஏவுகணை மழை – பலர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இன்று அதிகாலை பாரிய ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், பல கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) டெலிகிராமில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த பகுதியில் மீட்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பொடில்ஸ்கி மாவட்டத்தில் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு நகரம் முழுவதும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




