இந்தியா செய்தி

உத்தரப் பிரதேசத்தில் 22 வயது இளைஞரின் உயிரை காப்பாற்றிய மெட்டா

Uttar Pradesh man sentenced to 20 years in prison for sexually assaulting minor girl

உத்தரப் பிரதேசத்தில்(Uttar Pradesh) 22 வயது இளைஞன் ஒருவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை மெட்டா(Meta) எச்சரித்ததை அடுத்து பதோஹி(Badohi) காவல்துறை அவரை காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுராய்(Aurai) காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞன், “என் அன்பே, நான் இறப்பதற்கு முன் இதுவே எனது கடைசி செய்தி, நான் இறந்த பிறகு எனக்காக பிரார்த்தனை செய், இன்று நான் 50 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளேன், நான் இறந்தாலும் கவலைப்படாதே” என்ற வாசகத்துடன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞனுக்கு குடும்பத்தினர் மோட்டார் சைக்கிள் வாங்க மறுப்பு தெரிவித்ததால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காவல் தலைமையகத்தில் உள்ள சமூக ஊடக மையத்திற்கு(SMC) மெட்டாவிலிருந்து மின்னஞ்சல் எச்சரிக்கை வந்தது.

எச்சரிக்கையை அறிந்த SMC, உடனடியாக அந்த நபரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து பதோஹி காவல்துறைக்கு தகவல் அளித்தது.

தகவலின் அடிப்படையில், அவுராய் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு அவரது வீட்டை அடைந்தது.

வீட்டை அடைந்ததும், அந்த நபர் தனது படுக்கையில் அமைதியின்றித் திரும்பிக் கொண்டிருப்பதையும் வாந்தி எடுப்பதையும் அதிகாரிகள் கண்டனர், பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி